தேவனின் பூவே
காதலரின் தீவே
சின்னஞ்சிறு குழந்தைகூட
உன் முகம் கண்டு உணவருந்தும்
தாய்மை உள்ளம்
உன்னை கண்டு வணங்கிடும்
காலத்தின் மாற்றத்தில்
இருள் சூழ்ந்துக் கொண்டதால்
கவலைகள் கொண்டாயோ
கொடுமைகள் பலகண்டு
தூரத்தில் சென்றாயோ
பொய்யான உலகத்தில்
மெய்யான காதல்
உள்ளத்தில் அழிந்ததால்
விலகியே போனாயோ
காமத்தில் கட்டுண்டு
காதல் என்று ஏமாற்றி
நடமாடும் மனிதரால்
தேய்பிறை கண்டாலும்
வளர்பிறை கொண்ட நிலவே நீ
மேகத்தில் கரைந்தாயோ