ஒளிமுகம் தான் காட்டி
ஒளிர்கின்றாய் நீயும்
நிலவொளியில் காயும்
எங்கள் நினைவுகளை
நீ இல்லாத வேளையில்
எந்த வெளிச்சத்தில் தேடுவோம்..!
தேய்ந்தாலும் வளர்ந்தாலும்
இரவுக்கு துணையாய்
பாதையின் ஒளியாய்
கூடவே நடக்கும்..
தேவதை நீயே..
காதலின் கதையோ..!
கனவுகளின் விதையோ..
எல்லாவற்றையும் உன்னில்
விதைத்தே பழகிப்போன எங்களுக்கு
நீ உலவரும் நேரமே
விடியலாகிறது..
மாதத்தில் ஒருநாள் மறையும்
ஒற்றை நிலா உனை
காணாது இருளுகாமும்
இந்த பூமியில்..!
தன் காதலியை.
இன்னொரு நிலவெனவே
காண்கிறான் கவிஞன்!
தேயாதே.. கரையாதே.. மறையாதே..
மனதை விட்டு என்றும் நீ.!