வற்றாத வளம் நிறைந்து இருக்கும் இந்த நாட்டில்
வாரி வழங்கும் வள்ளல்களும் இருக்கின்றனர்
தூங்கி திரியும் சோம்பேறிகளும் இருக்கின்றனர்
பூமியில் தன் பாதத்தை பதித்த உடன் ஓட ஆரம்பிக்கிறோம் -என்றும்
புன்னகையுடன் வாழ வேண்டும்
என்ற ஆசையில் நம் வாழ்க்கையை துவங்குகிறோம்.
உன் வாழ்க்கை பயணத்தின் பாதையை தீர்மானிக்கும்
பொறுப்பு உன்னிடம்!!!
ஓடிக்கொண்டிருக்கும் நாட்களில்
ஏதை தேடிக்கொண்டு இருக்கிறாய் .....நீ
நீ தேடுவதை நிறுத்து-உன்னை
தேடும்படி செய்!!!
தோல்விகளை துடைத்தெரிந்து
உனக்கான புதிய ஓட்டத்தை ஆரம்பி!!!
சுட்டெரிக்கும் சூரியனும்-அதை
வட்டமிடும் சந்திரனும்
உன் புதிய ஓட்டம் சரியானால்
உன்னிடம் வந்து தஞ்சம் அடையும்
உன் வேகம் கண்டு ஓடி ஒழியும்!!!