புதிய ஓட்டம்.கவிஞர் மா.உலகநாதன்

அன்னை நடைபயிற்ற 
ஆடி அசைந்த குழந்தை  
அன்னையையும் ஓடவைக்கும்;
அது ஒரு புதிய ஓட்டம்!
கடைக்கண்ணால் நோக்கி 
காதலி அனுப்பும் கனிந்த  
புன்னகையால் கடிது வருமே
ஒரு  
மின்சாரப் பாய்ச்சல்;
அது தரும்     
புதிய ஓட்டம்!
கவியெழுத எண்ணும்போதெல்லாம் 
கணக்கிலா சொற்கள்
 வந்த வந்து கடந்து போகும்;
கச்சிதமாய் ஒரு சொல் 
கனியும்போது 
களி கொள்ளும்  மனம்;
அது தரும் ஒரு புதிய ஓட்டம் !
நாட்டமெல்லாம் நன்றானால் 
நாளும் புதிய ஓட்டம்;
வாட்டம் போக்கி வாழ்வைப் 
புகழாக்கும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com