புதிய ஓட்டம்...! புதிய சிந்தனை...!
புரிந்து நடந்தே புழுதியை தட்டுவோம்
ஊழலென்ற புழுதியை ஊரைவிட்டே விரட்டுவோம்
அவலம் நிறைந்த ஆட்சியின் துணியை
அழுக்குப்போக அடித்துத் துவைப்போம்
வெண்மை என்ற வெளுப்பு வரும்வரை
வெள்ளாவியில் இட்டு வேக வைப்போம்
வெளுத்த ஆடையை வீணர் உடுத்திடும்
காலம் மாறிடும் கோலம் கண்டிட
மக்கள் பெற்ற மகத்துவ வாக்கினை
தேர்தல் வந்தால் தேடிவந்து காலில்விழுந்தே
காசுகளை அள்ளிவீசி காரியம் சாதித்திடும்
கலாச்சார போக்கினை களைந்திட கரம்கோர்த்தே
கயவர் கூட்டத்தை காலால் மிதித்தே
காமராஜர் ஆண்ட காட்சியை காணுவோம்
புதிய ஓட்டம்...! புதிய சிந்தனை...!