நிசப்த வெளியில்: கவிஞர் கே. அசோகன்

நிசப்தவெளியின் உள்ளே வெளியேநிஜங்கள் உள்ளதடா!நிசப்தவெளியின் இரகசியம் புரிந்தால்ஞானம் பிறக்குமடாகாற்றின் பேரோசை பின்னேகலந்து நிற்குதடாஆற்றின் ஓட்டத்திலேயும் அதுஅடங்கி கிடக்குதடாபூமிப்பந்தின் சுழற்சிக் குள்ளேபொதிந்து இருக்குதடாசாமிக்குள்ளும் அருளாய் அதுசமைந்து கிடக்குதடாஓசைக்குள்ளே ஒடுங்கி கிடப்பதுநிசப்த வெளியடாஆசைக்குள்ளும் அடங்கி கிடப்பதும்அதுவே தானடா!பொருள்கொண்ட பேர்களும் தேடுவதுநிசப்த வெளியடாஅருள்சேர்க்க துடித்திடும் ஆன்மீக பேருக்குஅதுவே துணை தானடாஇமைமூடி கிடந்தாலோ கிடைப்பதுநிசப்த வெளிதானடாஉமைபாகன் இமயத்தின் மீதேறிஒடுங்குவதும் நிசப்த வெளியடா!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com