நிசப்த வெளியில்: சீர்காழி.ஆர் .சீதாராமன்

புதிய பயணம் முற்றிலும்
மாறுபட்ட வேறுபட்ட புனித
பயணம் நிசப்த வெளியில்
அமைதிப் ஜில் ஜில் பயணம்

யாருமில்லை மனிதன்
புற்கள் பூக்கள் இனிமை
பழங்களும் காய்களும் இளமை
உயர்ந்த  நிசப்த வெளியில்

அரசியல் சண்டை இல்லை
சாதி பேதம் இல்லை கெடு
செய்ய வில்லை அமைதி
எங்கும் நிசப்த வெளியில் "

இயற்கையின் இனிய ராகம்
காற்றின் சிலிர்ப்பு வேகம்
தூசு இல்லா வானம் தூய்மை
பசுமை நிலவ நிசப்த வெளியில்

பார்க்க பார்க்க பரவசம் ரசிக்க
ரசிக்க குகூகுலம் நினைக்க
நினைக்க மனம் பண்படும்
ஏற்ற மிக்க நிசப்த வெளியில்

கர்வம் ஆணவம் அகங்காரம்
பொய் புரட்டு திருட்டு கள்ளக்
காதல் வேட்டு மாசுபட்ட மனது
ஏதும் இல்லை நிசப்த வெளியில்

இயற்கை எழில் தூய்மை
கண் படவும் வழி இல்லை
நெரிசல்  நெருடல் இல்லை
நிசப்த வெளியில் மெதுவாய்
நகரும் கனவு பின் இரவு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com