மழையில் நனைகிறதுஒவ்வொரு மனமும்!பூக்களுக்கோஈரத்தடவல்களால்இரண்டாம் முறை மலரும் பரவசம்!பயிர்களின் உடல்களுக்குள்தண்ணீர் பாய்ச்சுகிறதுபுத்துயிரை..!.இலைகளின் நடனமோசொல்லத் தேவையில்லை...!கூரைகளில்தாளகதி பிசகாதசங்கீதக் கச்சேரி...!வால் கிளப்பிச் சப்திக்கும்பறவையே...நீ கூட மழையின் காதலனா...?மண்வாசனையோடுகாதலும் கவிதையும் கிளர்கின்றன...!மணிக்கூட்டுக் கோபுரத்தின் கீழ்மாற்றுத் துணியற்ற பெண்ணின்மார்புறிஞ்சும் குழந்தை மட்டும்மழையை மறுதலித்து அழுகிறது!