பிஞ்சு மனங்கள் நம்மைதென்றலாய் வருடும்! பூக்களாய் கொஞ்சும்!சங்கீதமாய் சிரிக்கும்! செல்ல மழையும் நம்மை தென்றலாய் வருடும்! குற்றால சாரலாம் பூக்களாய் கொஞ்சும்! சங்கீதமாய் சிரிக்கும்! பிஞ்சு மனங்களும் செல்ல மழையும் நம்மைத் தாலாட்டும் அன்னையர்! பிஞ்சு மனங்களும் செல்ல மழையும் பாலைவன உள்ளங்களையும் பசுஞ்சோலையாக்கும் மந்திரவாதிகள்! பிஞ்சு மனங்களும் செல்ல மழையும் பூமியையும் சொர்க்கத்தையும் இணைக்கும் பாலங்கள்!பிஞ்சு மனங்களும் செல்ல மழையும் பாடங்கள் கற்பிக்கும் ஞானிகள்! பிஞ்சு மனங்களும் செல்ல மழையும் வாழ்வை வளமாக்க இறைவன் நமக்களித்த அற்புதப் பரிசுகள்!