செல்ல மழை நீர்தாங்கி செடிகளிங்கே சிரிக்கும்-தன்சிறகுகளை விரித்தங்கு குருவிகளும் பறக்கும்!துள்ளிக் குதித்தாடிப் பிஞ்சுகளும் சிலிர்க்கும்-இன்றுபள்ளியில்லை யெனப் பரவசத்தில் மிதக்கும்!சின்னமழைத் தூறலிலே சேறாகும் சாலைகளும்-காலில்செருப்பின்றி நடப்பதிலே மகிழ்வாகும் பிஞ்சுகளும்!வானவில்லாய் வட்டமிடும் வண்ணத்துப் பூச்சிகளும்-புதுவசந்தத்தின் பூக்களாய் இதழ்விரிக்கும் மழலைகளும்!காற்றோடு மழைவந்து தொலைகாட்சிமுடங்கும்-உடன்பெற்றோரின் பாச மழை பிள்ளைகள் மீது தொடங்கும்!அன்பான சொற்களில் அலைபுரளும் பாச வெள்ளம் –இதுஎன்றும் தொடராதா என்றேங்கும் பிஞ்சுகளின் உள்ளம்!மழைமுகம் கண்டே இங்கு நெல்மணிகள் விளையும்- நம்மழலைகளின் மகிழ்வில்தான் எதிர்காலம் விரியும்!நல்ல மழை வரவில்தான் நாடென்றும் செழிக்கும்- அந்தசெல்லமழை குளியலில்தான் பிஞ்சு மனங்களும் பூக்கும்!