"சொட்" "சொட்" எனப்பெய்யும் செல்ல மழைசொக்கித்தான் போயிருந்தது"டொக்" "டொக்" என நடக்கும்பிஞ்சின் அன்ன நடையில்...பிஞ்சு மனதின் கப்பல் ஆசைக்காகவேஅவ்வப்போது அவன் வாசல் வந்து"ஹாய்" சொல்லிப்போகிறதோ மழை..?அப்போதுதான் ஆரம்பித்திருந்தது தூறல்அன்னாந்து பார்த்த மழலை.."ஒந்து" "ரெந்து" என ஒவ்வொரு துளியாய் எண்ணத்துவங்கஅதனைக்கண்டு நிறுத்தி நிதானித்துரசித்துப் பெய்கிறது மழை..மழையைக் கொஞ்சம் பிடித்து வைத்திருந்த மரம்மழலை பக்கம் வரும் போதெல்லாம்காற்றை துணைக்கழைத்துமெல்ல மழலை மேல் பொழிந்துவிளையாட்டு காட்டிக்கொண்டிருக்கிறது..அழுகும் மழலைக்கு ஆறுதலாய் மழைபொழியும் மழைக்கு அரவணைப்பாய் மழலைஇப்படி மழையும் மழலையும் எப்போதும் சேர்ந்திருக்கவாழ்வின் பக்கங்களில் சந்தோஷ நதி துள்ளியோடும்..