இதயத்தை இங்கிதத்தொடு வருடிக்கொடுப்பதால்,இரண்டுமே ஒன்று எனலாம்.பிஞ்சுமனம் கொஞ்சும் மழலைத் தேன்சிந்தும்;செல்லமழையோசிணுங்கிச் சிணுங்கிச் வானமழை சிந்தும்.அடியெடுத்து வைத்து தத்தித்தத்தி தளர்நடை பழகையிலே அன்ன நடை பயிலும்.கண்டவர்கொண்டவர் எவரிடமும் பேதமின்றித் தாவும்.மழைகூட அப்படித்தானே?கெடுப்பதுவும் கெட்டார்க்குச் சார்வாய்,பேதமின்றிப் பொழிந்து கொடுப்பதுவும் செல்ல மழையல்லவா?