பிஞ்சு மனங்கள் மகிழ்ந்த
வனங்களை அழித்து
குளங்களை தூர்த்து
வெடித்தபூமியில்
வாடிய மரங்களைப் பிளக்க
சனங்களின் வதனத்தில்
பூத்த பனித்துளியின் நீராவியை
உறிஞ்சி தெளித்தது முகில்கள்
நீரை கொடையென பாறையில்
வர்ணனின் மன்னிப்பில்
சுரந்தமழைத் துளிகள்
மனம்போல் வடிந்தது கடலினில்
நீர் அணைகளின் தடுப்பின்றி
கயவர்கள் கண்மூடிய ஆட்சியில்
மன்னிப்பு என்பது கிடையாது
மறுதேர்தலின் வாக்களிப்பில்!