பிஞ்சின் நெஞ்சம்
கிள்ளும்,
கொஞ்சல் மழைத்
துள்ளல்...
கை நீட்டி,
வா என்னும்
மெய் மறக்கும்
வானம் பாடி,
மேலெழுந்த பார்வையோடு
வானம் பார்க்கும்
பிள்ளை உள்ளம்.
இலையெல்லாம்
இழைக்கப்படும்
மழைத்துளியை
நூலாய்ப் பற்றி.
நுழைந்ததனில்
நிழல் கொள்ளும்
இளம் மனங்கள்
நிழல் பற்றி.
மலர்ந்த இறகில்
மறந்த
மயிலும் ஆடும்
ஆட்டம் மலையைச் சுற்றி,
மழையின் பின்னே ஓடும்
ஓட்டம் மயிலை வெல்லும்
அழகுச்
சுட்டி.
குடையை மறந்தே
பறக்கும் மனங்கள்
குளிருமங்கே மறந்து போகும்;
உயரப் பறந்தே மழையைக் கொய்து
களிப்புக் கொள்ளும்
வயது கொண்டு...