நதிக்கரையின் நினைவலைகள்:  கவிஞர் பூ.சுப்ரமணியன்

வைகை நதிக்கரை ஓரத்தில்
வயதான மூதாட்டி
குழல் புட்டு விற்கையிலே
பிட்டுக்கு மண் சுமந்த
பெருமானின் திருவிளையாடல்
படரும் நினைவலைகளாக
என் மனதில் ஓடின !

யமுனை நதிக்கரை ஓரத்தில்
கண்ணன் வேடமிட்டு
குழலோடு சிறுவன்
கானம்பாடி வருகையிலே...

என் புல்லாங்குழல் இசை
இனியவை என்பார்கள்
உன் குரல் கேட்காதவர்கள்

அன்று
கண்ணன் ராதையிடம்
காதல்மொழி பேசியவை
என் காதில் ஒலித்தன !

பாயும் கங்கை நதிக்கரையில்
பசித்து நிற்கும் வேளையிலே
பாமரன் தேனும் தினைமாவும்
புன்னகையுடன் கொடுக்கையிலே...

பால் பழம் தேன் ராமனுக்கு
கள்ளமில்லா குகன் வழங்கியது
உள்ளத்தில் ஓடம்போல் ஓடியது !

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com