பச்சைப்பட்டு டுத்தி பகட்டான அழகுசெய்து பார்ப்பவர்கள் மனம்கிழ பவனிவரும் ஒருகிராமம்உச்சிமலை யினின்று ஊர்ந்து விழும் வெள்ளிஅருவி உவகையுடன் பணிந்துவரும் மல்லிகைப்பூ கிராமம்நிச்சியமாய் நெல் விளையும் நிகற்ற பூமியது! நின்று புகழ்சேர்க்கும் இன்றும் அந்த சிற்றூர்!பச்சைக் கம்பளதில் அழகுமிகு இருகரைகள் பார்க்கத்திகட்டாத நதிக்கரையின் நினைவலைகள்!பூங்காக் கவியரங்கம் மாணவனாய் எனக்கு பூரிப்பைக் கொடுக்கும் நித்தமும் புத்துணர்வு தரும்மங்கா நினைவின் நதிக்கரையின் நினைவலைகள்! மாமனிதர் நேரு வந்தார், எம்.ஜியார் வந்துள்ளார்ஓங்குபுகழ் கண்ணதசன் கவியரங்க தலைமையேற்பார் ஒல்காப் புகழ் அண்ணா உரையாற்ற வந்துள்ளார்மங்காபுகழ் படைத்த கலைஞர் வந்தார், பல்கலை தந்தார் அன்னை தெரஸாவின் அமுதப் பெயர்சொல்லி! தித்திக்கும் நினைவலைகள்! என் நேஞ்சில் என்றும்! தீராது வாழ்கின்ற தமிழுணர்வின் சொந்தம்!