காய்ந்து கருகாய் போன மனமே !
காதலால் காமத்தால் புத்திகெட்டு
தறிகெட்டு ஓடிய மனமே !
கற்பனையிலும் வரகூடாதென தோன்றும்
கண் கெட்ட பின்
சூரிய நமஸ்காரம் செய்யும் மனமே !
கல்வி காணும் பருவத்தே
கலவிக்கு அலை பாய்ந்த அற்ப மனமே !
தவறென்று தெரிந்தும்
திரும்ப திரும்ப
ஊடலாக்கி கூட நினைத்த மனமே !
செய்த தவறினை எண்ணி எண்ணி
காவிரி கரையோரம் சுடுகாட்டு
மண்டபத்தில்சாமியாராய்
உட்கார வைத்த மனமே !
ஊர் போற்ற உலகம்
வாழ்த்த உன் கை சாம்பல்
பிரசாதமாக பெற்று செல்லும்
பேதை மக்களே!
நதி நீர் அலைவலைகள் வீசும் சுகம்
இப்பூத உடலுக்கு இதமென்றோ !
மனம் வெப்பத்தில்
நினைவலைகளால் வாடுகிறதே ?
இதுவன்றோ ரிஷி மூலம்
யாருக்கு தெரியும்? புரியும்?