நதிக்கரையின் நினைவலைகள்: சர்வோ சீனிவாசன் 

காய்ந்து கருகாய் போன மனமே !
காதலால் காமத்தால் புத்திகெட்டு 
தறிகெட்டு ஓடிய மனமே !

கற்பனையிலும் வரகூடாதென தோன்றும் 
கண் கெட்ட பின் 
சூரிய நமஸ்காரம் செய்யும் மனமே !

கல்வி காணும் பருவத்தே 
கலவிக்கு அலை பாய்ந்த அற்ப மனமே ! 
தவறென்று தெரிந்தும் 
திரும்ப திரும்ப 
ஊடலாக்கி கூட நினைத்த மனமே !

செய்த தவறினை எண்ணி எண்ணி 
காவிரி கரையோரம் சுடுகாட்டு 
மண்டபத்தில்சாமியாராய் 
உட்கார வைத்த மனமே !

ஊர் போற்ற உலகம் 
வாழ்த்த உன் கை சாம்பல் 
பிரசாதமாக பெற்று செல்லும் 
பேதை மக்களே!

நதி நீர் அலைவலைகள் வீசும் சுகம் 
இப்பூத உடலுக்கு இதமென்றோ !

மனம் வெப்பத்தில் 
நினைவலைகளால் வாடுகிறதே  ? 
இதுவன்றோ ரிஷி மூலம் 
யாருக்கு தெரியும்? புரியும்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com