அலைகள் என்றுமே ஓய்வது
இல்லை நினைவலைகளும்
ஓய்வதில்லை மனிதனின்
மனதும் நிலையாக இல்லை
நதிகளில் பொங்கி வழிந்து
அலை புரள நீர் ஓடியது ஒரு
காலம் அப்போது தோன்றிய
நினைவலைகளும் பலப்பல
கவிஞனின் சிந்தனைக்கு
மருந்தாக வழிகாட்டியாக
நிழலாக ஊக்குவிக்கியாக
நதிக்கரையின் அலைகள்
தடம் புரண்ட காலம் புரியாத
புதிர், இருண்ட காலம்
வறண்ட காலம் நீர் இல்லா
நிலையே நதியின் கோலம்
சுயமாக நதியின் புலம்பல்
தேடல் எதிர்பார்ப்பு வலி
மாற்றம் நினைவலைகளை
அசை போடுகிறது நதிகள்
நீரோடும் அலையோடும்
மோதும் ஒலியோடும் சலசல
சிரிப்போடும் அழகோடும்
புதுமை சில்லென்று அன்று
அனல் பறக்கும் காற்றும்
சுடும் மணலோடும் காய்ந்த
நதிகளின் கரைகள் தேடும்
இழந்த நினைவலைகளை
பசுமையை கூட்டி நீரைத்
தேக்கி என்றும் தென்றலாய்
நதிக்கரையின் நினைவலை
சதிராட துணை இருப்போம்