கரை புரண்டோடிய நதியே
காண்பதற்கு இனிய காட்சியே
காணாமல் ஏங்கும் மனம்
கண்ணீரில் தவிக்கிறோமே
பச்சைப்பசேல் நிறத்தில்
பசுங்கிளிகள் பறந்தோடும்
பச்சைப்புல்வெளிகள்
வறண்டு கிடக்கும் மாயமென்ன
மங்கையவர் நீராடி
மகிழ்ந்த காலம்
சின்னஞ்சிறு குழந்தைகள்
சிறகடித்து நீரை ரசித்த காலம்
வராதோ....
வாழ்வே சின்னபின்னமாகிப்
போனதோ...
உழவர் உவகை கொண்டு
உற்சாகமாக உழுது மகிழ்ச்சி
கண்ட பொழுதுகள்...நதியே
உன் வரவின்றி கானலானதோ
கண்ணீர் துடைக்க நதியே வா
கழனியெல்லாம் செழிக்க வா
கண்கள் பூரிக்க காதலனுடன் வா
கவிதையாக வா நதியே.....