படிக்கும் வயதில் படிக்காமல்பிச்சை எடுத்து வாழும் குழந்தைகள்.பள்ளி செல்லும் பெண் குழந்தைகளைபார்வையாலே கொல்லும் படுபாவிகள்.அறிவைத் தரும் கல்வியானது லஞ்சத்தால்உயிரைப் பறிக்கும் உயிர்க் கொல்லியானது.போர் செய்யும் இளம் வீரர்களின் கையில்போதை தரும் மயக்கப் பொருட்கள்.நாட்டுக்காகத் தன் உயிரைக் கொடுக்காமல்தீய செயலுக்காகத் தன்னைத்தானே அழிக்கும் தீயவர்கள்.வரனாக அமைய வேண்டிய கணவனேவரதட்சணை கேட்கும் வில்லன் ஆனான்.உடம்பை வளர்க்கும் உணவானது கலப்படத்தால்உயிரை எடுக்கும் எமனானது.சமூகக் குற்றங்களை களைந்துஅறநெறியைக் கடைபிடிப்போம்!