சமூகக் குற்றம்: அதியணன்

பால் குடி மறவா குழந்தைக்கும் பாலியல் குற்றங்கள் நடந்திடுதே! பள்ளிக்கு செல்கின்ற பிள்ளையையும்பாழ்படுத்தி கூட்டமும் களிக்கிறதே!தடயங்கள் சாட்சிகள் அழித்தொழித்து தவறுகள் தினம்தினம் பெருகிடுதே! குருதியை குடிக்கின்ற போதைக்கு குற்றங்கள் சுவையாகி கிடக்கிறதே !வழக்கினை தொடுத்தாலும் நியாயமில்லை வாய்தா கொடுத்தேதான் அலையவைப்பார்!சாட்சிகள் தடயங்கள்  அழித்தொழித்து சட்டத்தை காசுக்கு பணியவைப்பார்! கொலைசெய்யும்  கூலிப்படை மிகுகின்ற கொடுகோன்மை நாட்டினிலே அறமுண்டோ?வான்மழை பொய்த்தே வருத்திவிடவஞ்சனைகள் எப்போது தீர்ந்திடுமோ ?ஆழி சூழ் நிலத்தில் தீமை செய்வார் அடக்கமிடும்  நாள்தான் பிறக்காதோ ?  அன்பாக கருணையாக வாழ்வதற்கே அகிலத்தில் இடமொன்று இருக்காதோ ?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com