கற்கவும் அதன்வழி நிற்கவும்
கற்றுத்தந்து, கல்வியோடு,
கடமையையும் கண்ணியத்தையும்
போதித்த இச் சமூகத்திற்கு
ஒரு சிறிதளவேனும் கைம்மாறு
செய்யாமலிருப்பது
சமூகக் குற்றம்;
அறம் செய்து பொருளீட்டி, இன்பம்
துய்ப்பவரேயனாலும்,
கொடுத்து மகிழும்
குனமில்லாதிருப்பது ஒரு
சமூகக் குற்றம்;
எந்த வயதிலும்
எந்த நிலையிலும் பிறர்க்கு
இன்னுரை வழங்காமல்,
சிரித்து வாழாமல் இறுகிய
மனம் கொண்டிருப்பது ஒரு
சமூகக் குற்றம்;