குழந்தையென்றும் பாராமல் கொடூரமென்றும் நினையாமல்காமக் கிளர்ச்சி காட்டும் கயவர்களை என்ன சொல்ல?தான் வாழ்ந்தால் போதுமென்று தர்மங்களைக் காற்றில்விடும்பச்சோந்தி தலைவர்களைப் பார்விட்டுத் துரத்த வேண்டாம்?!தலைவன் என்ற போர்வையில் தருக்கர்கள் வாழ்வதையேஏற்கும் இந்தச் சமுதாயமே எல்லாக் குற்றங்களுக்கும் அடித்தளம்!மக்கள் ஆட்சி என்று பேசி மக்களையே மூடராக்கிகோலோச்சும் கொடியோரைக் கொலைக்களம் அனுப்பலாமா?!வீடுகட்டி சாலைபோட்டு விளைநிலத்தில் வியர்வை சிந்தும்தொழிலாளர் வர்க்கம் இங்கே துவண்டு போக விடலாமா?குற்றங்களைக் குறைத்திடவே கொடூரத் தண்டனைகளைநிறைவேற்ற அரசு இன்னும் தாமதித்தல் முறைதானா?கொள்ளையைக் காட்டிலும் கூடுதல் பணத்தையிங்குவங்கிகள் கொடுத்துவிட்டு வால் பிடிப்பது முறைதானா?நம்பணத்தில் வாழ்ந்துகொண்டு நம்மையே இழுத்தடிக்கும்அரசு அதிகாரிகளை அப்படியே விடலாமா?நல்லவர்கள் சேர வேண்டும் நலமதையே நினைத்திங்கேவல்லவராய் வாழும் நிலை வகுத்திட வேண்டாமா?குற்றம் புரிவோரே கோலோச்சும் அரசியலைபுரட்டிப் போட வேண்டும் புதுமைகளைப் புகுத்த வேண்டும்!இன்றைய உலகினிலே இளைஞர்கள் அதிகம்பேர்வாழும் இந்நாட்டை வல்லூறுகள் கொத்திப் போவதா?இளைஞனே!எழுவாய் நீயும் இதயத்தில் வீறு கொண்டு!நாளை உதயம் நமதென்று தோள் தட்டு!முறைகெட்டுத் திரிவோர்க்கு முடிவு கட்டிடவேமுழுதாய்க் களமிறங்கு!முழு மூச்சுடன் செயலாற்று!