கரவுகொண்டோர் நெஞ்சம்
அரவுக்கு ஒப்பானதென்று
சொல்லி வைத்தார் அன்று;
பெயருக்கு
மாசிலாமணிகள் இருக்கலாம்.
ஆனால் மாசிலா மனிதர்கள்
இருக்க வேண்டுமே?
காலை எழுந்தவுடன்
எத்தனை வேடம்?
முகமூடி அகமூடி பொய்ச்
சிரிப்போடு புறப்படுவர் ;
உதட்டிலொன்றும்
உள்ளத்திலொன்றும்,
வாடிக்கையாய்க் கொண்ட
வேடிக்கை மனிதர்கள்;