வஞ்சம் செய்வாரோடு: கவிஞர் மா.உலகநாதன்

கரவுகொண்டோர்  நெஞ்சம்
அரவுக்கு ஒப்பானதென்று
சொல்லி வைத்தார் அன்று;

பெயருக்கு
மாசிலாமணிகள் இருக்கலாம்.
ஆனால் மாசிலா மனிதர்கள் 
இருக்க வேண்டுமே?

காலை எழுந்தவுடன் 
எத்தனை வேடம்?

முகமூடி அகமூடி பொய்ச்
சிரிப்போடு புறப்படுவர் ;
உதட்டிலொன்றும் 
உள்ளத்திலொன்றும்,
வாடிக்கையாய்க் கொண்ட
வேடிக்கை மனிதர்கள்;

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com