தாயின் கருவறையில்
துணையாய் வந்த தனிமையிடம்
என்னை ஏன்
இவ்வளவு பிடிக்குமென்று கேட்டேன்?
கருவறையில் உருவான உன்னை
கழிவறையில் விட்டு
உன் தாய் போனபோது
நீ என்னுடன்தான் பயணித்தாய்!
சமூக வீதியில்
சந்தைப்பொருளாகாமல்
தன்னம்பிக்கையோடு போராடி
தலைநிமிர்ந்து நீ நின்றபோது
உன்னருகில் நான்!
நீ வளர்ந்த போதும்;தளர்ந்தபோதும்;
என்னிடம் தான் புலம்புவாய்!
அதனால் தான்
உன்னைப்பிடிக்கிறது என்றது
நான் பிறந்தபோது
என்னருகில்
மிகநெருக்கமான தனிமை!