அந்நாளே திருநாள்: பா. காயத்ரி ரதி

தரணியெங்கும் தமிழர்கள் 
தங்களின் தமிழ்மொழியோடு 
தலைநிமிர்ந்து நடக்கும் நாள் 
தன்னலமில்லா தலைவர்கள் 
தாய்நாட்டுக்கு உழைக்கும் நாள். 

ஏழைகளற்ற இந்தியாவை 
ஏற்றத்துடன் பார்க்கும் நாள். 
ஏற்றத்தாழ்வுகளற்ற
ஏட்டுக்கல்வி எல்லோருக்கும் 
கிடைக்கும் நாள் 
தகுதியை மட்டுமே பார்த்து 
தேர்தலில் தலைவரை 
தேர்ந்தெடுக்கும் நாள்

மகத்துவமான மருத்துவம் 
ஏழை பணக்காரன் 
என்றில்லாமல் சமமாக 
எல்லோருக்கும் கிடைக்கும் நாள்.
அந்நாளே திருநாள்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com