நினைவுப் பெட்டகம் -2017: பாலா கார்த்திகேயன்

நினைவுப் பெட்டகத்தில் 
அழியாத பொக்கிஷமாய் 
அன்பு நினைவுகள் மனதில் 
மலரும் நினைவுகளாய் 
மனதில் மலர்கிறது......

பெற்றவருக்கு பிள்ளையாய் 
வாழும் காலம் 
பொற்காலம் எனத்தெரிகிறது 

கேட்டதெல்லாம் கிடைக்கும் 
கேட்காமலே மனதில் உற்சாகம் 
அரும்பும் 

மழலையாய் இருந்து 
மழையில் நனையும் 
மகிழ்ச்சியான தருணங்கள் 

மத்தாப்பு வானம்
நோய்தரா இனிப்பு 
ஆறும் குளமும் பூஞ்சோலையும் 
எங்கும் சந்தோசத்தோரணங்கள் 

திரும்ப வராத 
திருவிழாக் காலங்கள் 
நினைத்தாலே மேனியெங்கும் 
பரவசங்கள்....

பிள்ளையாய் இருந்து விட்டால் 
துன்பம் இல்லை 
பிள்ளைப் பருவம் போல வேறு
இன்பம் ஏதும் இல்லை....

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com