நினைவுப் பெட்டகம்-2017: கவிஞர் நம்பிக்கை நாகராஜன்

போகும் போதே 
பள்ளமும் மேடும்
பாதையில் 
இருப்பது
“இயற்கை”

ஏற்றமும் இறக்கமும்
இருந்திடும்
என்றாலும்
வெற்றியில் 
இருக்கனும்
“வாழ்க்கை”

வாழ்ந்திடும் போதே
வாழ்க்கையின்
நிலவரம்
தெரிந்து கொண்டாலே
“தெளிவு”

வந்ததை இழந்து
வாய்ப்பினைத் 
துறந்து
நின்றிருந்தாலே
“இழிவு”

உயர்ந்தவர் எல்லாம்
எளிதினில் அந்த
இடத்தை 
அடைந்தவர்
“அல்ல”

துயரத்தில் தினமும்
தோல்விகள் கண்டு
துடித்தவர் கதை கேள்
“சொல்வார்”

தோல்விகள் எல்லாம்
படிப்பினை
வெற்றிக்கு
வான் வரை சென்றிடு
“தோழா”

தோள்களின் வெற்றியின்
மாலைகள்
தவழ்ந்திட
தொடருனும்
முயற்சிகள்
“வீழா”

நிறைத்திடும் நினைவில்
நினைவின் திறத்தால்
நிகழ்ந்திடும்
நன்மையின்
“நிகழ்ச்சி”

“நினைவுப் பெட்டகம்”
நிறைப்பது
நீதான்
நெஞ்சுக்குள்
விதைத்திடு
“மகிழ்ச்சி”
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com