கவிதைமணி
வீணையின் நாதம்: சீர்காழி .ஆர்.சீதாராமன்
சமத்துவம் காட்டும் காலக்கருவிஇசை சிறுவர் முதல் பெரியவர்வரை தலையாட்ட வைக்கும்இன்பப் பொக்கிஷம் இசைமனிதனின் உடலில் அங்கஅசைபோட வைத்து மனதைஇலேசாக்கி அமைதி படுத்திமகிழ்ச்சி தருகிறது நாதம் பல ராகங்களை,ஏழு சுரங்களைவீணையின் கம்பிகள் சுகம்படஅள்ளி அலை அலையாய்வீசுகிறது இதமாக பதமாக "முப்பெருதேவியில் கலைவாணிவீணை ஏந்தி அதை இசைத்துஅருள் மழையில் இறைவனை எழுப்பும் பூபாளம் அழகிய வீணையின் நாதம் பக்தி மயமேமனதில் பொங்கும் உற்சாகம்பாதிப்பு உணர்ச்சிப் பெருக்குகிளர்ச்சி ஈடுபாடு, பிரிவு பந்தம்வீணையின் நாத பெருமழையே ஸ்ருதியோடு லயம் சேர்ந்துவந்து விழும் அருவி போன்றவீணையின் நாதம் கேட்பவரைதன் வசப்படுத்தும் மாமருந்தே வீணையின் கம்பிகளுக்கு தனிஇடமும் பெயரும் உண்டு அதுபெண்ணின் கூந்தல் போல்பலரையும் ஈர்க்கும் அழகால்நாபிக்கமலம் முதல் தலை உச்சிவரை வீணையின் நாதம் எழும்பிஉடலையும் உள்ளத்தையும் சமன்படுத்தி சமநிலை தருகிறதேஇயற்கையின் அத்தனை ஒலிஎதிரொலி் அசைவின் அதிர்வுஉரசல் விலகல் இணைப்பு துடிப்பு வீணையின் நாதமேமனிதன் இசை போல சமநிலை சமத்துவ குணம் பெற வளரந்திடவீணையின் நாதம் வழிகாட்டிதடம் பதிக்கும் படிக்கல்லே