யுத்தம் செய்யும் கண்கள்: -ரெத்தின.ஆத்மநாதன்

கண்களால் யுத்தம் செய்து கவரும் பெண்களன்றோஅடங்காக்  காளையரையும்  அடக்கி  வழி  காட்டிஉள்ளத்தில் அமைதி தந்து ஊரையும் நல்வழிப் படுத்திஉலகத்தை நிம்மதியின் உறைவிடமாய் ஆக்க வல்லார்!கண்களால்  பேசக்  கற்றுக்  கொண்டு  விட்டால்வாய்க்கு வேலையில்லை!வசை பாடத் தேவையில்லை!ஒலியெழுப்பி ஊர்கூட்டி உதவாதவனவெல்லாம் பேசும்நிலை மாறும்! உலகில் நிம்மதியே கொலு விருக்கும்!கண்கள் செய்யும் யுத்தமெல்லாம் காமத்திற்கே யென்றுதப்பாய்க்   கணக்கிடுவோர்  தரணியில்  மிக  வதிகம்!பார்வை ஒன்றால் மகவுகளின் பாதையை நேர்செய்யும்எத்தனையோ  பெற்றோர்கள்  ஏகமுண்டு   மேதினியில்!ஆசிரியர்  அதிகாரி  அதிகாரம்  மிகக்  கொண்டோர்ஆழ் மனத்தின் ரேகைகளை அழகாகப் புரிந்திருப்போர்வாய்பேசி  வார்த்தைகளால்  வழிகாணும்  நிலை  விட்டுமௌன மொழி பேசி தம் கண்களால் காரியம் சாதிப்பர்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com