உன்னைத் தவிர
குறு குறு பார்வையால்
எவரும் என்னை விழுங்கியதில்லை..
உன்னைத் தவிர
இதயத்தின் வாசலை
எவருக்கும் திறந்ததில்லை..
உன்னைத் தவிர
எவரிடமும் இத்தனை
சண்டைகள் புரிந்ததில்லை..
உன்னைத் தவிர
நெருங்கும் எவரையும்
சட்டைசெய்ததில்லை..
உன்னைத் தவிர
எவரிடமும் உரிமை எடுத்துக் கொண்டதில்லை..
உன்னைத் தவிர
எவரும் என்னை
புரிந்துக் கொண்டதில்லை..
உன்னைத் தவிர
இத்தனை அன்பு
எவரும் வைத்ததில்லை..
என்னை விட
உன்னை எவரும்
நேசிக்க போவதில்லை..
எனக்காக பிறந்தவனே
எனக்காக வாழ்பவனே
உனக்காக உயிர்த்தேனே..
யுத்தம் செய்யும் கண்களில்
நித்தம் வழியும்
காதலிதுவோ.. ☺️