யுத்தம் செய்யும் கண்கள்: கவிஞர் நம்பிக்கை நாகராஜன்

இதுவும்
ஒருவகையுத்தம்
ஆம் இருவிழி
யுத்தம்

பொரும்
படைகளால்
பெறமுடியாத
வெற்றிகளைப்
பெற்றுத் தந்தது
இருவிழிகள்
செய்த இளமையுத்தம்

இருவிழிகளின்
யுத்த
வரலாற்றுக் காயம்
அது
இன்ப்துப் பால் செய்யும்
மாயம்

தூதுவன் இல்லை
அவன் வழியாக
தூதுகள்
இல்லை

யுத்தத்திற்கென்று
தனிஇடம்
வேண்டாம்
பேச்சுவார்த்தை
சமாதான
ஒப்பந்தம்
வேண்டமைய்யா

படைக்கலன்களை
பழுதுபார்க்க
வேண்டாமா ?
வேண்டாம் வேண்டாம்
வேண்டாம்

அழிக்கவும்
முடியும்
ஆக்கவும்
முடியும்    அன்புஎன்ற
ஓரேஆயுதத்தால் 

அன்பைஅன்பாகக்
கொடுத்தால்
மறுப்போர் 
உண்டு

ஆனால் 
மயக்கும்
இருவிழிகள்
அந்த
அன்பை
தரும்போது
மறுக்காமல்
ஏற்பார்கள்

எதிரியின் நெஞ்சத்தில்
போர்க் களம்
அமைத்து
வீயூகம் வகுத்து
காதலில் கசிந்துருக
ஆசையில் அலைந்திருக்க
வைக்கும்
மயக்கும்கண்களே
ஒருமாயக் கண்ணாடி
அங்கே

சரணாகதிதான்
எந்தநாடும் 
வீழும்

இதுவரை
வரலாற்றில்
தோற்றதே இல்லை
இந்தக் கண்கள்

சத்தமில்லாமல்
யுத்தம் செய்யும்
கண்களுக்கு
என்றும்
வெற்றி!வெற்றி!
வெற்றி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com