யுத்தம் செய்யும் கண்கள்: கவிதைப் பிரியன்

மொழி அறியா வார்த்தைகளால் உரையாடும் கண்கள்,தரை மீது நடமாடும்விண்மீன்கள் கூட்டம்,என்னவளின் உரை கேட்கமின்னலது துடிக்கும், - தன்கன்னல் பார்வையினால்சன்னல் கம்பி சிலிர்க்கும்,தொட்டு விட்டு தொடராமல் - நிலாஎட்ட நின்று ரசிக்கும்,மொட்டவிழ்த்து தாழையதுமணம் வீசி மகிழும், அவள்பட்டாம் பூச்சி கண்களினால்யுத்தம் ஒன்று நடக்கும்,மீட்டாத வீணை ஒன்றுதரை மீது தவழும்,சத்தமின்றி நடந்த இந்தயுத்தமே து மறியாதுசாத்திய கதவின் பின்உறங்கிடுமவள் கண்கள், அதைக்காணத் தவமிருக்கும்காதல் வயம் பாரீர்,விடியும் வரை நொடி எண்ணிநொடிந்தவனாய் நானும்.நெடும் பகலும் உதித்திடுமக்கதிரவன் தன் கண்ணால்மீண்டும் மாலைவரக் காத்திருப்பேன் - நிலவவளின்உதயம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com