வாக்கு தவறாமல்
செயல் புரிந்தவர்கள்
“வாங்கித்தான்”
வாக்குகள் அளிக்க வேண்டும் என்று
மாறியது என்று ?
வந்தாரை வாழ வைத்தவர்கள்
“தந்தாரை” மட்டும்
தூக்கி விடுவது ஏன் ?
உண்மைப்பெண்
உரசாத உதடுகள் –
நேர்மை, வேர்வை
மறந்து வரும் மண் –
இயற்பியலாய் இருந்த
வெள்ளை மனங்களில்
வெறுப்பு வேதியியல் ,
கருப்புச்சாயத்தில்
தோய்ந்த எண்ணத் தங்கங்கள் –
ஒரு இனத்தையே குருடாக்க
முளைத்தவர்களை
முனைப்புடன் தடுக்கத்
தொடங்கட்டும் ஒரு
கண்களின் யுத்தம் –
அதர்ம அம்புகளைத்தடுத்து
பார்வை பாதுகாக்க
“அறம்” என்ற அரணுடன்
தமிழன் எழுந்திருக்கட்டும்!