கல்லூரி சாலையினை நான்கடந்து போகையிலே... கண்ணிமைக்கும் நேரத்தில நேர்ந்ததொரு விபத்தால...உள்ளூர படபடப்பு, கண்ணிமைக்க கண்மறுப்பு.. கன்னியவ கண்ணைமட்டும் கண்டுகிட்டே நின்னதால...!ரத்தமில்ல, கத்தியில்ல கண்ணுசெஞ்ச வன்முறைல.. குத்தமுன்னா சட்டபடி...அக்கணத்தில் உள்ளபடி...யுத்தமொன்னு செஞ்சஅவ கண்ணமட்டும் கைதுபண்ணி சத்தமில்லா சிறையிலதான் தள்ளிடணும் சொல்லிடுவேன் !இத்தனையும் ஆனபின்னும் அப்படியே நின்னுருந்தேன்..! இன்னும்கொஞ்சம் வேணுமுன்னு சொல்லுறது போலிருந்தேன் !அத்தனையும் கண்டுக்காம தாண்டிஅவ போனதுல... அப்படியே கொட்டுதய்யா வார்த்தையெலாம் கவிதைபோல...!ஆழ்கடலில் மீன்வலைய வீசிப்புட்டு தேடுவாங்க... மீனைப்போல கண்ணுஇங்க வீசியதே காதல்வலை...பாழாப்போன எம்மனசு சிக்கிக்கிச்சே என்னசெய்ய? பார்த்துஏதும் சொல்லுங்கய்யா நான்நகர்ந்து போயிடுவேன்...!