நித்தமொரு கதைபேசி நினைவுகளை கலைத்துசத்தமின்றி இம்சை செய்யும் உந்தன்புத்தம் புதுமலரென முகத்தில் என்றும்யுத்தம் செய்யும் கண்களடி அழகே..தத்தை இவள் நினைவில் தினம்சித்தம் இழந்தேனே அறிவாயோ மனமே.வித்தை பலகற்று வியந்தே வாழ்ந்தாலும்பித்தாய் திரிய விட்டாய் பெண்ணே..முத்தமிடும் பனியாய் மழைத் துளியாய்தத்தம் செய்வாயோ தவமாய் கிடந்தேனேபுத்தன் நானல்ல பூவையே ஆசைதுறக்கமெத்தனம் வேண்டாமே மெல்லிடை யாளேதித்தித்திடும் தமிழாய் தென்றல் காற்றாய்புத்திக்குள் புகுந்த புதுமைப் பெண்ணவளின்மொத்த அழகில் மயங்கி மீண்டும்எத்திக்கும் அறியாமல் கிறங்கிப் போனேனே..