உன் கண்கள் செய்யும் யுத்தத்தால்
நான் புண்பட்டு நிற்கின்றேன்
மேனி வில்லை வளைக்காமல்
மோகக் கணை தொடுக்கின்றாய்
வித்தை செய்யும் வித்தகியே என்
சித்தம் தடுமாறுது உன் விழி வீச்சில்
குத்தமில்லை காதலென சொல்லிவிடு என்
சித்தம் சீர் படும் சிந்தையும் செயல்படும்
வஞ்சி என்னை வதைத்தது போதும்
மிஞ்சி என்னை சிதைத்தது போதும்
நெஞ்சில் ஈரம் கொண்டு வந்திடு
கெஞ்சுகிறேன் யுத்தத்தை நிறுத்தி
என்னை உன் மனதால் கைதுசெய்துபோ