கயலாகும் விழிகள்
அங்கும் இங்கும் ஓடுதம்மா!
இயலோடு சேர்ந்த இசையாய்
பாடுதம்மா!
புயலாக புறப்படும் இளைஞரும் ஆங்கே
பூவாகினான்!
வியப்பாக புருவ வில்லை மங்கை யவளும்
ஏவினாள்!
அம்புமில்லை, ஆயுதங்கள் ஏதுமில்லை
யுத்தமாகிறது
வம்புமில்லை, வாய்க்கால் தகராறில்லை
நித்தமாகிறது
பருவத்திலே வருகின்ற கோளாறு
இனிக்கிறது
உருவத்திலே மெருகேறி காதலை
தணிக்கிறது