யுத்தம் செய்யும் கண்களுக்குள் நித்தமொரு பித்தம்கொத்து மலர்க் கொத்துவதில் ரத்தம்நிதம் கொட்டும்ரத்தினத்துச் சித்திரத்தில் முத்தமிடும் வெட்கம்சித்திரைப்பூ முத்திரையாய்த் தத்திவரும் சொர்க்கம்யுத்தம் செய்யும் கண்களுக்குள் மன்மதனின் ஆயுதம்சித்தமதைக் கட்டிவைக்கும் சித்துலீலை ஆயிரம்பற்றவைக்கும் கற்றைக்குழல் சுற்றிவரும் கோலம்கட்டழகுக் கட்டிலிலே கத்துங்கடல் ஆழம்யுத்தம்செய்யும் கண்களுக்குள் முத்தமிடும் போதுசத்தமுடன் தத்தையவள் யுத்தம் செய்வதேது?மத்துபடும் கட்டித்தயிர்கொட்டி வைத்தமேனிமற்றதெல்லாம் விட்டிடுவான் மன்மதனின் ஞானியுத்தம் செய்யும் கண்களுக்குள் காமன் கீதைச் சொல்லுவான்புத்தம் புதுபுத்தபுதுப்பூக்கள் ஏவிக் கொல்லுவான்யுத்தமிங்கே குற்றமில்லை தோற்றவனே வெல்லுவான்வற்றாத குற்றால அருவியெனத் துள்ளுவான்