பிஞ்சுகளின்
கோபங்கள்
ஆண்டவனின் − திரு
விளையாடலாய்;
வா! வா!
எங்க அம்மாகிட்ட
சொல்லித்தரேன்
எனத் தொடங்கி
பெற்றோரின்
சலனங்களை
லயனங்களாக்கி;
இளஞ் சூரிய
முகங்காட்டி
விரசமில்லா பேச்சால்
ரசமில்லா சோற்றைக் கூட
சீரணமாக்கும்
கொண்டையில்லா சேவல்கள்
செவியில் செல்லத்துளை
போடும்
வண்டுகளின்
மென் ரீங்காரமாக
கொள்ளப்படும்
எக்காலமும்
தித்திக்கும்
விளையாட்டுக் கொள்கைகள்...