கொஞ்சி விளையாடும் கோபம்: கவிஞர் மா.உலகநாதன்

காதல் மனையாளின்
ஊடலில்தான்
கோபம் கொஞ்சி விளையாடும்;
அவளின் சிணுங்கலில் ஒரு
சிருங்காரம் ரீங்காரம்;
கூடலில்
உச்சம் தொட அதுதானே
அச்சாரம்;

பிஞ்சு மழலைகள்
பேதமேதுமின்றி சேட்டைகள் 
பல செய்து,நம்மிடம்
கொஞ்சி விளையாடும்;
அப்  பொழுதுகளுக்கு இக் 
குவலயம் ஈடாகுமோ?
கோபமும் வருமோ?

பொய்க் கோபங்களால் ஒருபோதும் 
பொல்லாங்கு நேர்வதில்லை;
கொஞ்சும் கோபங்கள்,
மிஞ்சினால் தான் பழி நேரும்; 
பாபம் சேரும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com