என் மலருக்கு என்மேல் கோபமோ!?
என் மலரே!
உன் சிவந்த முகம் கண்டு
தேன் சொட்டும் பூவிதழ் என கருதி
தேன் எடுக்க வந்த தேனீக்கள்
உன் தலைவன் நான் என உணர்ந்து
என்கண் வருந்தி பணிந்து சென்றதை
நீ அறிவாயோ!?
என் முகம் பார்க்காமல்
நீ காட்டும் கோபம்
நீ அறியாமல் - நான்
ரசிக்கும் உன் முகம் அல்லவோ!?
நீ என்னை அழகாய் அடிப்பதும்
நான் உன்னை அன்போடு அனைப்பதும்
நான் பெற்ற பேறு அல்லவோ!?
நான் கொஞ்ச
நீ கொள்ளும் இந்த அன்புக்கோபம்
எனக்கான பெரும் கொடுப்பினை அல்லவோ!?
அன்பே உன்பால்
பெண்ணின் மடம் என்ற மொழிக்கு
மறுமொழி அறிந்தேன்- இவை
அனைத்தும் அறிந்தும்
என்பால் ஒன்றும் அறியாதவளாய்!!