தேவையான பொருள்கள்:
துருவிய பூசணி - 1 கிண்ணம்
சர்க்கரை - 1 கிண்ணம்
நெய் - கால் கிண்ணம்
முந்திரி, உலர்ந்த திராட்சை,ஏலக்காய்
செய்முறை:
வாணலியில் கொஞ்சமாக நெய்விட்டு பூசணித் துருவலை வதக்கவும்.
நன்றாக வதங்கிய பின்பு சர்க்கரை சேர்க்கவும். கேசரி கலர் சேர்க்கவும்.
நன்றாக சுருண்டு வரும் நிலையில் நெய் சேர்க்கவும்.
கடைசியில் ஏலக்காய், முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும்.