தேவையானவை:
பன்னீர் - 200 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி - 2
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
தனியாத் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 தேக்கரண்டி
நெய் - 2 தேக்கரண்டி
கிராம்பு - 4
பட்டை - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
செய்முறை:
வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். பச்சைமிளகாயை நீளமாக கீறி கொள்ளவும். பன்னீரை துண்டுகளாக்கி, சுடுதண்ணீரில் போட்டு எடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி 1 நிமிடம் வதக்கி தனியாக எடுத்து கொள்ளவும். பின்னர் அதே கடாயில் நெய் ஊற்றி பட்டை கிராம்பு போட்டு தாளித்து அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வெங்காயத்தைப் போட்டு 5 நிமிடம் வதக்கி, பின் தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பின்னர், அதில் அனைத்து தூள்களையும் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடி வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும். எண்ணெய் தனியாக பிரிந்து வந்தவுடன் அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து 2 நிமிடம் கிளறி மல்லி இலை தூவி இறக்கினால் சுவையான கடாய் பன்னீர் ரெடி.