பிறவித்துயர்அற ஞானத்துள் நின்று
துறவிச் சுடர்விளக்கம் தலைப்பெய்வார்,
அறவனை, ஆழிப்படை அந்தணனை
மறவியை இன்றி மனத்துவைப்பாரே.
பிறவியாகிய துயரத்தை அறுத்து, ஞானநெறியில் நின்று, உடலைத் துறந்து, ஞானவடிவமான ஆன்மாவை அனுபவிக்க விரும்புகிறவர்கள் என்ன செய்கிறார்கள்? அறத்தின் உருவானவனை, கையில் சக்ராயுதத்தை ஏந்திய அந்தணனை, எம்பெருமானை மறக்காமல் மனத்தில் வைக்கிறார்கள்.