தெரிந்துஉணர்வுஒன்றுஇன்மையால், தீவினையேன்
வாளா இருந்துஒழிந்தேன் கீழ்நாள்கள்எல்லாம், கரந்துஉருவில்
அம்மானை அந்நான்று பின்தொடர்ந்த ஆழிஅம்கை
அம்மானை ஏத்தாது அயர்ந்து.
அன்றைக்கு மான் போன்ற மாயத்தோற்றத்தில் வந்த மாரீசனைப் பின்தொடர்ந்து வீழ்த்தியவன், அழகிய கைகளில் சக்ராயுதத்தைக்கொண்டவன், எம்பெருமான்,
புத்திசாலித்தனம் இல்லாத தீவினையேனாகிய நான், அந்த அம்மானைப் போற்றாமல் வீணாகப் பல நாள்களைக் கழித்துவிட்டேன். (இனி அவனை எண்ணுவேன்).