இறைமுறையான் சேவடிமேல் மண்அளந்த அந்நாள்
மறைமுறையால் வான்நாடர் கூடி முறைமுறையின்
தாதுஇலகு பூத்தெளித்தால் ஒவ்வாதே தாழ்விசும்பின்
மீதுஇலகித்தான் கிடக்கும் மீன்?
வானத்தில் நட்சத்திரங்கள் பிரகாசமாகத் திகழ்கின்றன, (அவற்றைப் பார்க்கும்போது, எனக்கு இன்னொரு காட்சி நினைவுக்கு வருகிறது,)
அன்றைக்கு எம்பெருமான் வாமனாவதாரம் எடுத்தபோது, தேவர்களெல்லாம் வானில் ஒன்றாகக் கூடினார்கள், ஒவ்வொருவராக, வேதங்களில் சொல்லப்பட்டுள்ள முறைப்படி அவருடைய திருவடி மீது பூத்தூவினார்கள்,
வானில் அங்குமிங்கும் பரந்திருக்கும் இந்த நட்சத்திரங்கள், அந்தப் பூத்தூவலைப்போலவே உள்ளன.