மீன்என்னும் கம்பில் எறிஎன்னும் வெள்ளிவேய்
வான்என்னும் கேடுஇலா வான்குடைக்குத் தானோர்
மணிக்காம்புபோல் நிமிர்ந்து மண்அளந்தான் நங்கள்
பிணிக்குஆம் பெருமருந்து பின்.
வானம் என்பது, அழிவில்லாத பெரிய குடை. அதில் நட்சத்திரங்கள்தான் கம்பிகள், சந்திரன்தான் அதன் உச்சியில் இருக்கும் குண்டலம்,
அன்றைக்கு எம்பெருமான் வாமனாவதாரம் எடுத்து உலகை அளந்தான், அப்போது, அவனே இந்தக் குடைக்கு நீலமணிக் காம்பாக ஆனான்,
அத்தகைய பெருமான், பின்னர் எங்களுடைய பிறவிநோய்க்குப் பெரிய மருந்தாகவும் ஆனான்.