காமுற்ற கையறவோடு எல்லே இராப்பகல்
நீ முற்றக் கண்துயிலாய், நெஞ்சுஉருகி ஏங்குதியால்,
தீ முற்றத் தென்இலங்கை ஊட்டினான் தாள்நயந்த
யாம்உற்றது உற்றாயோ! வாழி! கனைகடலே!
ஒலியெழுப்பும் கடலே, நீ எதன்மீதோ விருப்பம் வைத்திருக்கிறாய், அதனால் துன்பப்படுகிறாய், இரவும் பகலும் நீ தூங்குவதே இல்லை, நெஞ்சுருகி ஏங்குகிறாய், என்ன ஆயிற்று? நீயும் எங்களைப்போல் எம்பெருமான் மீது நேசம்கொண்டாயோ? இலங்கையைத் தீக்கு உணவாக்கிய அந்தப் பெருமானின் திருவடிகளை எண்ணித் துன்புற்றாயோ? நீ வாழ்க.