திண்ணன் வீடுமுதல் முழுதுமாய்
எண்ணின் மீதியன் எம்பெருமான்,
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்டநம்
கண்ணன் கண்அல்லது இல்லை ஓர்கண்ணே.
உறுதியான பரமபதம் தொடங்கி அனைத்து உலகங்களும் அவனே, எல்லையில்லாத நற்குணங்களைக் கொண்டவன் / நம் நினைவுகளுக்கு அப்பாற்பட்டவன் அவன், எம்பெருமான்,
மண்ணும் விண்ணும் மொத்தமாக உண்ட அந்தப் பெருமான், நம் கண்ணன், அவனையன்றி நமக்கு வேறு யார்தான் தலைவன்? (வேறு யாருமில்லை!)